
சமீபத்தில் இங்கு நடந்த கோர்ட் கேஸ் இது. 12 வயதில் இன்னும் 5 பேருடன் செய்த கொலைக்குற்றத்துக்காக ஒரு சிறுவன் (பைலி ஜுனியர் குரரிகி) சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.
பிஸ்ஸா டெலிவரி செய்யவந்தவரை அடித்துப்போட்டுவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் பிஸ்ஸாவையும் எடுத்துக்கொண்டார்கள் இந்தச்சிறுவர்கள். தண்டனை பெற்ற அத்தனை பேருக்கும் வயது 18க்குள்தான்.
அதில் மிகக்குறைந்தவயதுடையவன் இந்த குரரிகிதான்(Bailey Kurariki,). குற்றம் செய்தபோது இவனுக்கு வயது 12 மட்டுமே. இப்போது 17 வயதாகிறது. ஏழு வருடசிறைத்தண்டனையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழிந்து விட்டன. பிறக்கும்போது யாருமே குற்றவாளியாய் பிறப்பதில்லை. வளர்ப்பும் சேர்க்கையுமே
ஒருவரின் குணத்தை செதுக்குகிறது. கூடா நட்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.
இரண்டு முறை பரோலுக்கு முயற்சி செய்து பரோல் மறுக்கப்பட்டுவிட்டது இச்சிறுவனுக்கு. உளவியல் சோதனைக்குட்படுத்தியதில் மீண்டும் குற்றம் இழைக்க நிறைய வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இச்சிறுவனின் முகத்தைப்பாருங்கள். இவனப்போய் கொலைகாரன் என்கிறார்களே என்பீர்கள்.

