Saturday, July 14, 2007

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே



சமீபத்தில் இங்கு நடந்த கோர்ட் கேஸ் இது. 12 வயதில் இன்னும் 5 பேருடன் செய்த கொலைக்குற்றத்துக்காக ஒரு சிறுவன் (பைலி ஜுனியர் குரரிகி) சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.

பிஸ்ஸா டெலிவரி செய்யவந்தவரை அடித்துப்போட்டுவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் பிஸ்ஸாவையும் எடுத்துக்கொண்டார்கள் இந்தச்சிறுவர்கள். தண்டனை பெற்ற அத்தனை பேருக்கும் வயது 18க்குள்தான்.


அதில் மிகக்குறைந்தவயதுடையவன் இந்த குரரிகிதான்(Bailey Kurariki,). குற்றம் செய்தபோது இவனுக்கு வயது 12 மட்டுமே. இப்போது 17 வயதாகிறது. ஏழு வருடசிறைத்தண்டனையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழிந்து விட்டன. பிறக்கும்போது யாருமே குற்றவாளியாய் பிறப்பதில்லை. வளர்ப்பும் சேர்க்கையுமே

ஒருவரின் குணத்தை செதுக்குகிறது. கூடா நட்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.


இரண்டு முறை பரோலுக்கு முயற்சி செய்து பரோல் மறுக்கப்பட்டுவிட்டது இச்சிறுவனுக்கு. உளவியல் சோதனைக்குட்படுத்தியதில் மீண்டும் குற்றம் இழைக்க நிறைய வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இச்சிறுவனின் முகத்தைப்பாருங்கள். இவனப்போய் கொலைகாரன் என்கிறார்களே என்பீர்கள்.

Friday, July 6, 2007

ஜூலை ஏழு

இன்னிக்கு 07/07/07
இது 1000 வருஷத்துக்கு ஒரு தரவ தான் வருமாமே.

Thursday, July 5, 2007

சோதனை

சோதனை மேல் சோதனை

நாளைக்கு நல்லா குளிரும் மழையும்னு டீவில சொல்லிட்டாங்க
அதிகபட்சம் 7டிகிரி செ.கி. குறைந்தபட்சம் 6டிகிரி செ.கி.

Monday, July 2, 2007

அட்டமம்




நம்மளையும் மதிச்சு கண்மணி எட்டு போடவாங்கன்னு கூப்பிட்டுருக்காங்க. என்னன்னு போடறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். எதோ பின்னுட்டம் போட்டமா பதிவுகளப்படிச்சமான்னு இருந்த என்ன நல்லா மாட்டி விட்டுட்டாங்க.
1. நான் பொறந்தப்ப அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம பொறந்தேன்னு சொல்லுவாங்க. அம்மாவுக்கு வலி வந்ததும் ஆட்டொல கூட்டிட்டுப்போயிருக்காங்க. டாக்டர் வந்து பாத்து செக்கப் பண்ணும்போதே நான் பொறந்தாச்சு. இன்னும் ஒரு நிமிசம் தாமதிச்சுருந்தாலும் ஆட்டொலயே பொறந்துருப்பனாம். ஹூம் , அப்படியாவது நம்மளப்பத்தி எதாச்சும் செய்தி வந்திருக்கும்.
2. பிறந்து கொஞ்ச நாள்லயே ப்ரைமரி காம்ப்ள்க்ஸ்னு டயக்னைஸ் பண்ணியிருக்காங்க. அவ்வளவுதான் பூட்ட கேஸ்னு நெனச்சது தினம் 3 ஊசி போட்டு பொழச்சு வந்தாச்சு. அப்பல்லாம் இது கொஞ்சம் பயப்படறமாதிரி நோய்தானாம். எங்கப்பா மாச சம்பளம் வாங்கி அப்படியே டாக்டருக்கு பீஸ் குடுத்துருவாராம். நல்லவேளை!! அது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. தெரிஞ்சவங்க மத்தியில சின்னதுல எனக்கு ஆரோக்ய மேரின்னு பட்டப்பெயர் உண்டு.
3. வீட்டில் நாந்தான் கடைசி.மூணாவதும் கடைசியும். கடைக்கு கூட்டிட்டுப்போனா துருதுருன்னு எதாவது குறும்பு பன்ணீட்டு இருக்கறத்ப்பாத்த கடைக்காரர் 'மூணாவது பொறந்ததா"ன்னு கேட்டாராம். அவருக்கும் வீட்டுல ஒரு அறுந்த வானரமமிருந்திருக்கும் போல இருக்கு.
4. . ப்ளஸ் டூ முடிச்சுட்டு கூடப்படிச்சவங்க எல்லாம் பிகாம் சேர்ந்தாங்க. காசு குடுத்தாதான் பிகாம் சேரமுடியும்போல இருந்துது. அதனால எகனமிக்ஸ் சேர்ந்து படிச்சேன்.யூஜில நாந்தான் பர்ஸ்ட் மார்க். அப்பறம் போஸ்ட் க்ராஜுவேஷனும் பண்ணியாச்சு. 5. படிக்கும்போதே earn while you learn -ல சேர்ந்து நானும் என் தோழியும் பார்ட் டைம் வேலை பார்த்தோம். ரொம்ப பெரிய தொகை இல்லன்னாலும் ஒரு அளவுக்கு பணம் கிடைச்சுது. சுயமா அப்பவே பணம் சம்பாதிக்கிறோம்னு சந்தோஷம் வேற. அப்பவே சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை. படிக்கும் போதே காம்ப்படிடிவ் எக்ஸாம் எழுதினேன். படிச்சுமுடிச்சதும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில வேலையும் கிடைச்சுது. 5 வருசம் அங்கேதான் வேலை. கல்யாணமாகி நியூஸி வர்ர வரைக்கும். இங்கயும் வந்து ஒரு வங்கியில் பணி. 7. என்னொடது கலப்பு திருமணம். ஆனா அரேஞ்டு தான்.எங்க வீட்டுல சாப்பாட்டுல சைவம். அதனால மாப்பிள்ளையும் சைவமா இருக்கமாரி பாத்தாங்க. கடைசில ரங்கமணி மாட்டுனார். இன்னி வரைக்கும் சைவமா தாக்குபிடிச்சுட்டு இருக்கோம். 6. ஈரோடு, பொள்ளாச்சின்னு ஊர் சுத்தீட்டு திரும்ப கோயமுத்தூருக்கே வந்தாச்சு. அப்பறம் நியுஸியும் வந்தாச்சு. ஈரோட்ல ஹாஸ்டல்ல தங்கி வேலைக்குப்போயிட்டு இருந்தேன். அந்த நாட்கள் மறக்கவே முடியாது. என்னக்கேட்டா எல்லாரும் கொஞ்ச நாள் அப்பா அம்மாவ விட்டு இப்படி தனியா இருந்தா உலக அனுபவம் கிடைக்கும்னு சொல்வேன்
8. நியூஸி வந்து 8 வருஷம் ஆச்சு. போன வருஷம் எதோ நியூஸி பத்தி தேடுனப்போதான் துளசி டீச்சர் ப்லொக் கண்ணுல மாட்டுச்சு. அப்பதான் தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கறதும் தமிழ்ல இவ்வளவு பதிவுகள் இருக்கறதும் தெரிஞ்சுது. அப்பறம் கார்த்தியின் கனவுலகம், அபி அப்பா, கண்மணி, இலவச கொத்தன்னார் னு நிறைய பேர் பதிவு படிச்சு நம்ம அறிவயும் வளத்துக்கிட்டு இருக்கேன்.
விளையாட்டின் விதிகள்:1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
இதுவரைக்கும் யாரெல்லாம் எழுதலயோ அவங்க எல்லாரும் 8 போட்ருங்க சீக்கிரமா

அப்பாவின் அறுபது

அப்பாவின் சஷ்டியப்தபூர்த்தி
அடுத்தவர் அறியாமல்
கள்ளக்கல்யாணம்போல நடந்தது....
* * *
அம்மா இருக்க
அறுபது வயசில்
இன்னொரு பெண்ணைத் தாலி கட்ட
எத்தனை ரகசியங்களின் காவல் வேண்டுமோ
அத்தனையுடனும்
அம்மாவை அறுபது பண்ணிக்கொண்டார்.

* * *

அப்பாவின் அலுவலகத் தலைகள் ஏதும் நுழைந்துவிடாதிருக்க
அவர்கள் முகமறிந்த நான்
அர்த்த மண்டபத்தில் காவலிருந்ததால்
அப்பாவின் கிழட்டுக் கல்யாணத்தையும்
கண்ணுறக் கிட்டவில்லை.

* * *
ரெண்டு வயசு முந்திக்கொடுத்த
ஆரம்பப்பள்ளி ரகசியம் அரசு அறிந்தால்
அடுத்த கணம் வேலை போகும் என்பதை அறிந்திருந்த விரல்கள்
மார்கழிக்குளிரில் நடுங்குதென்று
அய்யர் தந்த தாலியை
அம்மாவின் கழுத்தில் அப்பா கட்டிக்கொண்டிருக்கிறார் என்று
நிசப்தத்திலிருந்து புறப்பட்டுவந்த
மாங்கல்ய ஸ்லோகத்தின் ரீங்காரத்தினின்றும் அறிந்துகொண்டேன்.

********

சுதேசமித்திரனின் அப்பா கவிதைத்தொகுப்பிலிருந்து நான் ரசித்த கவிதை

Saturday, June 30, 2007

அப்பாவின் வீரம்

அப்பா குடிப்பார் என்று
அப்போது எனக்கெப்படித் தெரிந்திருக்க முடியும்?
அந்த வார்த்தையே அறிந்திராத வயசு எனக்கு....

* * * *
அம்மா பத்திரகாளியாய்
என்னையும் அக்காவையும்
அர்த்தம் புரியாமல் அழுகின்ற மழலையின் தெய்வீகத் துணையின் பொருட்டும்
கரங்களில் பற்றிக்கொண்டு
தட்டிற்று கதவை...
அம்மா நிஜமாகவே பத்திரகாளிதான்,
அது கை கட்டி வாய் பொத்து ~ என்றால் ஒருமணி உட்கார்ந்திருந்த
தினங்கள் உண்டு.
அப்போதெல்லாம் அப்பாவின் மத்தியஸ்தம்
அருகாமைத்திரையரங்கில் அடுத்த
சினிமாவாயும் பாப்கார்னாயும் வெளிப்படும்....

* * * *

அப்பா இருந்த உறக்க அறைக்கதவு இடிபட்டது...
நீ என் தம்பியாடா? குடி கெடுக்க வந்தவனே...
....நீங்க எக்கேடும் கெட்டுப்போங்க,
நான் என் பிள்ளைகளோட நல்லதங்காளாய் போறேன்...
~எனக்கு அப்போதே நல்ல தங்காள் கதை தெரியும்,
என்னைக் கிணற்றின் இருட்டும் கெட்ட நீரின் பலாத்காரமும் மருட்டின.
அழுதே அன்றைக்கு உயிரை விட்டிருப்பேன்....
அப்பாவாச்சும் வெளியே வந்து விடாமல் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும்
என் அழுகைக்கு ஒரு அர்த்தமிருப்பதுமட்டும் அம்மாவுக்குத்
தெரிந்தால்....?

* * * *
கதவு திறந்து அப்பா தெரிந்தார்
அப்பாவின் காலிடுக்கில் அறையின் மையத்தில் மாமாவும்
அந்த டீப்பாயின் மேலே பாட்டிலொன்றும் தெரிந்தன.
அம்மா ரொம்ப மோசம்...
வாட்டர்பர்ஸ் காம்பெளண்டு அதுவே எனக்குத்தரும்,
அப்பா குடித்தால் தப்பா?

* * * *
அப்பாவின் மெளனம் அம்மாவைச் சீண்டிற்று,
சாவேன்... இதோ இதைக்குடித்து என் பிள்ளைகளோடு சாவேன்
~ என்று அதுவும் ஒரு பாட்டிலைக் காட்டிற்று...

* * * *
அப்பா வாய் திறந்து ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்,
சரி!
~ கதவடைத்து உள்ளே போனார்

* * * *

இந்தக்கவிதை சுதேசமித்திரனின் "அப்பா"
என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து நான் படித்து ரசித்தது.

லேட்டா பாத்தாலும் லேட்டஸ்டா பாத்தேன்

இன்னிக்கு பெரியார் படம் பாத்தேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்யணும்னு நினைச்ச நல்ல மனம் கொண்டவரப்பத்தின படம். ஒரே மூச்சுல பாத்தேன். ரொம்ப நாளைக்கப்பறம் இப்படி ஒரே சிட்டிங்ல பாத்த படமமிதுதான். எப்பயும் அரைஅரை மணி நேரமாத்தான் பாக்கரது.
மக்களுக்கு நல்லது செய்ய பதவி தடைன்னா பதவியே வேண்டாம்னு சொன்னவர். ஆனா அவரோட கொள்கைகள பின்பற்றுகிறோம்னு சொல்றவங்க சிலர்......ம்ம்ம்ம். நமக்கெதுக்கு அரசியல்.

இன்னொரு படமும் பாத்தென். பெரியார் படத்துக்கு எதிர்பதமா இருந்துது. எப்படியெல்லாம் படம் இருக்கக்கூடாதோ அப்படியே இருந்தது. அப்பயும் ஓட்டி ஓட்டி பாத்துட்டமில்ல. படம் பேரு கணபதி வந்தாச்சு. தெரியாமக்கூட பாத்துராதீங்க.

அடுத்த வாரம்தான் சிவாஜி பாக்கப்போறேன். எல்லாரும் பாத்தாச்சு. நாம மட்டும் பாக்காம இருந்தா எப்படி.