ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்
பார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்
பகர்மாயை யாற்புறத்தே
பார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்
பயில்கனவு பொய்யாதல்போல்
ஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை உணர்த்தி
உலகுய்ய யோ கத்திருக்கும்
சீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (1)
வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்
வேற்றுமை யிலாததாகி
பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்களா னவுலகைச்
சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்
சிருட்டித்த தேவதேவே
சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (2)
எந்தமெய்ப் பொருளினோளி எப்பொருட் களிலும்
இயைந்தே விளங்கலுறுமோ
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியவுப தேசமருண்மோ
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகுமோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (3)
பலதுளைக ளுடைய குடமுற்றதீ பத்தினோளி
பரவலென ஐம்பொறிவழிச்
செலுமொளிய ஃதெது ? நான் அறிந்தேனனச்சொலத்
திகழுமொளி யெது? எதனையிவ்
வுலகமுழுதும் பற்றி யிகலுறும் அவ்வான்ம
சித்தாகி ஞானிகள்தொழும்
திகழுமுயர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (4)
உடலுடலில் உலவுவளி ஐம்பொறிகள் கரணங்கள்
ஒன்றுமே இல்லாதபாழ்
கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலினாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டுகொல்லோ
திடமுதவு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (5)
அராநுகர் கலாதர திவாகரர் சமானமுற
அருமாயை யுள்மறைந்தே
உராவுகர னாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்தனித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்
சிராமலைய குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (6)
பாலியமு தற்பருவம் நினைவாகி நிலையெனப்
படுவேறு நிலையிலெல்லாம்
மாலையுறு நாரென ஒரேபொருள தாய்நின்று
மாறாததன் மயத்தைக்
கோலியசின் முத்திரையின் அறிவுறுக் கின்றநற்
கோலத்த ஞானயோகச்
சீலமுறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (7)
நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந்தே மாயையால்
கனவிய பிராந்தனாய் உலகமிதனைக் கார்ய
காரணத் தன்மையோடும்
தனதுதன் சாமிதாய் தந்தைமுத லியபேத
தன்மையும் காணவல்ல
சினமதறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (8)
நிலனீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானனென்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன் கூர்த்தமதியால்
அலசுவார்க்குத் தன்னை அன்றியொன் றேனுமின்
றானவன் பரமவான்மா
திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (9)
நூற்பயன்
எல்லா மேகபிரம்மயம் என்றே இயம்புமித் துதியை
வல்லார் சொல்லக்கேட்டாரும் மனதால் நினைக்கப்பெற்றாரும்
கல்லால் நீழற் கடவுளருள் கைவந் தவரே தாமாவார்
வல்லார் சித்தி எல்லாமும் வாழ்வோர் வானோர் மதித்திடவே !!
பார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்
பகர்மாயை யாற்புறத்தே
பார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்
பயில்கனவு பொய்யாதல்போல்
ஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை உணர்த்தி
உலகுய்ய யோ கத்திருக்கும்
சீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (1)
வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்
வேற்றுமை யிலாததாகி
பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்களா னவுலகைச்
சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்
சிருட்டித்த தேவதேவே
சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (2)
எந்தமெய்ப் பொருளினோளி எப்பொருட் களிலும்
இயைந்தே விளங்கலுறுமோ
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியவுப தேசமருண்மோ
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகுமோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (3)
பலதுளைக ளுடைய குடமுற்றதீ பத்தினோளி
பரவலென ஐம்பொறிவழிச்
செலுமொளிய ஃதெது ? நான் அறிந்தேனனச்சொலத்
திகழுமொளி யெது? எதனையிவ்
வுலகமுழுதும் பற்றி யிகலுறும் அவ்வான்ம
சித்தாகி ஞானிகள்தொழும்
திகழுமுயர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (4)
உடலுடலில் உலவுவளி ஐம்பொறிகள் கரணங்கள்
ஒன்றுமே இல்லாதபாழ்
கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலினாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டுகொல்லோ
திடமுதவு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (5)
அராநுகர் கலாதர திவாகரர் சமானமுற
அருமாயை யுள்மறைந்தே
உராவுகர னாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்தனித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்
சிராமலைய குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (6)
பாலியமு தற்பருவம் நினைவாகி நிலையெனப்
படுவேறு நிலையிலெல்லாம்
மாலையுறு நாரென ஒரேபொருள தாய்நின்று
மாறாததன் மயத்தைக்
கோலியசின் முத்திரையின் அறிவுறுக் கின்றநற்
கோலத்த ஞானயோகச்
சீலமுறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (7)
நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந்தே மாயையால்
கனவிய பிராந்தனாய் உலகமிதனைக் கார்ய
காரணத் தன்மையோடும்
தனதுதன் சாமிதாய் தந்தைமுத லியபேத
தன்மையும் காணவல்ல
சினமதறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (8)
நிலனீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானனென்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன் கூர்த்தமதியால்
அலசுவார்க்குத் தன்னை அன்றியொன் றேனுமின்
றானவன் பரமவான்மா
திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (9)
நூற்பயன்
எல்லா மேகபிரம்மயம் என்றே இயம்புமித் துதியை
வல்லார் சொல்லக்கேட்டாரும் மனதால் நினைக்கப்பெற்றாரும்
கல்லால் நீழற் கடவுளருள் கைவந் தவரே தாமாவார்
வல்லார் சித்தி எல்லாமும் வாழ்வோர் வானோர் மதித்திடவே !!

1 comment:
ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்.
மொழிபெயர்ப்பு திரு கு.நடேசன்
Post a Comment