Tuesday, June 26, 2007

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்தேன். எல்லாக்கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்தது.
அதில் ஒரு கொத்து சாவிகள் என்ற கதையும் சொல்லாத சொல் என்ற கதையும் மனசைத்தொட்டது. ஒரு வீடு குடும்ப சண்டையால் இடிக்க நேர்வதும் அது ஆசிரியரை பாதித்த விதமும் அருமை.

சொல்லாத சொல் என்ற கதையில் நண்பரின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதெ இல்லை என்பதும் அதற்கான காரணமும் எடுத்துச்சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது.

எழுத்தாளரின் உபபாண்டவம் படிக்க காத்திருக்கிறேன்.

(எஸ்.ராமகிருஷ்ணன் சினிமாவுக்கு கதை வசனம் எழுதப்போய்விட்டாராமே. சுஜாதாமாதிரி
இயக்குனர்களுக்கு மட்டும் வசனம் எழுதாமல் கதைக்கு இவராவது வசனம் எழுதட்டும்)

No comments: