
நம்மளையும் மதிச்சு கண்மணி எட்டு போடவாங்கன்னு கூப்பிட்டுருக்காங்க. என்னன்னு போடறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். எதோ பின்னுட்டம் போட்டமா பதிவுகளப்படிச்சமான்னு இருந்த என்ன நல்லா மாட்டி விட்டுட்டாங்க.
1. நான் பொறந்தப்ப அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம பொறந்தேன்னு சொல்லுவாங்க. அம்மாவுக்கு வலி வந்ததும் ஆட்டொல கூட்டிட்டுப்போயிருக்காங்க. டாக்டர் வந்து பாத்து செக்கப் பண்ணும்போதே நான் பொறந்தாச்சு. இன்னும் ஒரு நிமிசம் தாமதிச்சுருந்தாலும் ஆட்டொலயே பொறந்துருப்பனாம். ஹூம் , அப்படியாவது நம்மளப்பத்தி எதாச்சும் செய்தி வந்திருக்கும்.
2. பிறந்து கொஞ்ச நாள்லயே ப்ரைமரி காம்ப்ள்க்ஸ்னு டயக்னைஸ் பண்ணியிருக்காங்க. அவ்வளவுதான் பூட்ட கேஸ்னு நெனச்சது தினம் 3 ஊசி போட்டு பொழச்சு வந்தாச்சு. அப்பல்லாம் இது கொஞ்சம் பயப்படறமாதிரி நோய்தானாம். எங்கப்பா மாச சம்பளம் வாங்கி அப்படியே டாக்டருக்கு பீஸ் குடுத்துருவாராம். நல்லவேளை!! அது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. தெரிஞ்சவங்க மத்தியில சின்னதுல எனக்கு ஆரோக்ய மேரின்னு பட்டப்பெயர் உண்டு.
3. வீட்டில் நாந்தான் கடைசி.மூணாவதும் கடைசியும். கடைக்கு கூட்டிட்டுப்போனா துருதுருன்னு எதாவது குறும்பு பன்ணீட்டு இருக்கறத்ப்பாத்த கடைக்காரர் 'மூணாவது பொறந்ததா"ன்னு கேட்டாராம். அவருக்கும் வீட்டுல ஒரு அறுந்த வானரமமிருந்திருக்கும் போல இருக்கு.
4. . ப்ளஸ் டூ முடிச்சுட்டு கூடப்படிச்சவங்க எல்லாம் பிகாம் சேர்ந்தாங்க. காசு குடுத்தாதான் பிகாம் சேரமுடியும்போல இருந்துது. அதனால எகனமிக்ஸ் சேர்ந்து படிச்சேன்.யூஜில நாந்தான் பர்ஸ்ட் மார்க். அப்பறம் போஸ்ட் க்ராஜுவேஷனும் பண்ணியாச்சு.
5. படிக்கும்போதே earn while you learn -ல சேர்ந்து நானும் என் தோழியும் பார்ட் டைம் வேலை பார்த்தோம். ரொம்ப பெரிய தொகை இல்லன்னாலும் ஒரு அளவுக்கு பணம் கிடைச்சுது. சுயமா அப்பவே பணம் சம்பாதிக்கிறோம்னு சந்தோஷம் வேற.
அப்பவே சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை. படிக்கும் போதே காம்ப்படிடிவ் எக்ஸாம் எழுதினேன். படிச்சுமுடிச்சதும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில வேலையும் கிடைச்சுது. 5 வருசம் அங்கேதான் வேலை. கல்யாணமாகி நியூஸி வர்ர வரைக்கும். இங்கயும் வந்து ஒரு வங்கியில் பணி.
7. என்னொடது கலப்பு திருமணம். ஆனா அரேஞ்டு தான்.எங்க வீட்டுல சாப்பாட்டுல சைவம். அதனால மாப்பிள்ளையும் சைவமா இருக்கமாரி பாத்தாங்க. கடைசில ரங்கமணி மாட்டுனார். இன்னி வரைக்கும் சைவமா தாக்குபிடிச்சுட்டு இருக்கோம்.
6. ஈரோடு, பொள்ளாச்சின்னு ஊர் சுத்தீட்டு திரும்ப கோயமுத்தூருக்கே வந்தாச்சு. அப்பறம் நியுஸியும் வந்தாச்சு. ஈரோட்ல ஹாஸ்டல்ல தங்கி வேலைக்குப்போயிட்டு இருந்தேன். அந்த நாட்கள் மறக்கவே முடியாது. என்னக்கேட்டா எல்லாரும் கொஞ்ச நாள் அப்பா அம்மாவ விட்டு இப்படி தனியா இருந்தா உலக அனுபவம் கிடைக்கும்னு சொல்வேன்
8. நியூஸி வந்து 8 வருஷம் ஆச்சு. போன வருஷம் எதோ நியூஸி பத்தி தேடுனப்போதான் துளசி டீச்சர் ப்லொக் கண்ணுல மாட்டுச்சு. அப்பதான் தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கறதும் தமிழ்ல இவ்வளவு பதிவுகள் இருக்கறதும் தெரிஞ்சுது. அப்பறம் கார்த்தியின் கனவுலகம், அபி அப்பா, கண்மணி, இலவச கொத்தன்னார் னு நிறைய பேர் பதிவு படிச்சு நம்ம அறிவயும் வளத்துக்கிட்டு இருக்கேன்.
விளையாட்டின் விதிகள்:1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
இதுவரைக்கும் யாரெல்லாம் எழுதலயோ அவங்க எல்லாரும் 8 போட்ருங்க சீக்கிரமா